ஜெனீவா,டிச.9- ஒமைக்ரான் கொரோனா வைரஸ் டெல்டா வைரசை விட குறைவான தாக் கத்தையே ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ‘ஒமைக்ரான்’ என அழைக்கப் படும் புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தென் ஆப்பி ரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டுள்ளதால், அதிவேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்ற னர். இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உள்பட 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத் தாது என உலக சுகாதார அமைப்பு தெரி வித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கெப்ரி யேசஸ் கூறுகையில், ‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் சுலபமாக பரவ லாம். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் ஒமைக்ரான் பரவலாம். ஆனால், டெல்டா வைரசு டன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் வைரஸ் குறைவான தாக்கத்தையே ஏற் படுத்தும் என்பதற்கு சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன’ என்று தெரி வித்தார்.