தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) தலைவராக இருக்கும் ரூபா குருநாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என இரண்டு பொறுப்புகளில் இருப்பதால் அவர் மீது இரட்டை ஆதாயக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தனது கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகி யுள்ளது. ரூபா இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சீனிவாசனின் மகள் ஆவார். இவரது கணவர் குருநாத் ஐபிஎல் அணியான சென்னை அணியின் நிர்வாகத்தை கவனித்து வந்தவர். பிசிசிஐ மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையை பெற்று கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பொறுப்புடன் தமிழ்நாடு கிரிக்கெட் அணியை திறம்பட வழிநடத்தினார்.