கோவை, ஏப்.26- கோவை விமான நிலை யத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 1.8 லட்சம் பயணிகள் மற்றும் 828 டன் கார்கோ கையாளப்பட்டுள்ளதாக வும், அந்த மாதத்தில் பயணி கள் போக்குவரத்து 40 சதவீதமும், கார்கோ போக்குவரத்து 10 சதவீதமும் உயர்ந்துள்ளதாக விமான நிலைய நிர்வா கத்தினர் தெரிவித்துள்ளனர். கோவை சர்வதேச விமான நிலையத்தில், கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச போக்குவரத்து பிரிவில் மொத்தம் 10,214 பயணிகளும், உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 1,70,436 பயணிகள் என மொத்தம் 1,80,650 பேர் விமான போக்கு வரத்தை பயன்படுத்தியுள்ளனர். மேலும், கார்கோ போக்கு வரத்தில், சர்வதேச போக்குவரத்து பிரிவில் 85 டன், உள் நாட்டு போக்குவரத்து பிரிவில் 743 டன் என மொத்தம் 828 டன் கார்கோ கையாளப்பட்டுள்ளன. கடந்த 2021 மார்ச் மாதத் துடன் இந்த ஆண்டு ஒப்பிடுகையில் பயணிகள் போக்குவ ரத்து 40 சதவீதம், கார்கோ போக்குவரத்து 10 சதவீதம் அதி கரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1,23,664 பயணிகள் மற்றும் 749 டன் கார்கோ கையாளப்பட்டது குறிப் பிடத்தக்கது. கொரோனா நோய் பரவல் காரணமாக விமான போக்கு வரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் சமீப காலமாக மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த சூழலில் கோவை விமான நிலையத்தில் அதிகாலை முதல் இரவு வரை உள்நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்து பிரிவுகளை சேர்த்து தினமும் 22 விமானங்கள் இயக்கப் பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.