சென்னை, செப்.6- தமிழகத்தில் மொகரம் பண்டிகைக்கான விடுமுறை நாள் செப்டம்பர் 10ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொகரம் பண்டிகை இம் மாதம் 10 ஆம் தேதி கொண்டாடப்பட இருந்தது. இதை யொட்டி 10ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிறை தெரியாததால் 10ஆம் தேதிக்கு பதிலாக 11ஆம் தேதி யன்று விடுமுறை அறிவிக்கக் கோரி தலைமை காஜி அரசுக்கு கடிதம் எழுதி யிருந்தார். அதனை ஏற்று வரும் 11 ஆம் தேதி புதன்கிழமையன்று மொகரம் பண்டி கைக்கான அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் தலைமைச் செயலாளர் சண்முகம் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தலைமை காஜியின் கோரிக்கையின் படி அரசு விடுமுறை நாள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி
புதுச்சேரி சட்டப் பேரவையில் வெள்ளியன்று(செப்.6) கேள்வி நேரம் முடிந்தும் நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அசனா, “தமிழகத்தில் முகரம் பண்டிகைக்கு 11 ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித் துள்ளது. புதுச்சேரியில் 10 ஆம் தேதி என்று உள்ளது. இது மாற்ற வேண்டும்” என்றார். இதற்கு பதிளித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியிலும் முகரம் பண்டிகைக்கு 11ஆம் தேதி மாற்றி அரசு விடுமுறை விடப்படும்” என்றார்.