திருவனந்தபுரம், ஏப்.20- கேரளாவின் தொலைதூர பயணச் சிரமத்துக்கு முடிவு கட்ட எல்.டி.எப் அரசு முன்வைத்துள்ள சில்வர் லைன் ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு பச்சைக்கொடி காட்டும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. ஒன்றிய ரயில்வே துறை அமைச் சர் அஷ்வினி வைஷ்ணவ் புதனன்று (ஏப்.19) கூறிய வார்த்தைகள், இத்திட் டத்தின் பயனை ஒன்றிய அரசு உணர்ந்துள்ளது என்பதற்கு சான்று. சில்வர்லைன் என்பது மூடப்பட்ட அத்தியாயம் அல்ல என்றும், விவாதங் கள் தொடர்கின்றன என்றும் ஒன்றிய அமைச்சர் தெளிவுபடுத்தினார். விரை வில் முதல்வர் பினராயி விஜயனு டன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதா கவும் அவர் கூறினார். வந்தே பாரத்தின் பெயரைக் கூறி சில்வர் லைன் திட்டத்தை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ஒன்றிய இணை அமைச்சர் வி.முரளீதரனுக்கு, சில்வர்லைன் விவகாரத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் விளக்கம் அளி த்துள்ளார். கேரள அரசின் ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களை அரசியல் வேறுபாடுகளைக் காரணம் காட்டி எதிர்க்கக் கூடாது என்றும் மாநில பாஜக தலைமைக்கு ஒன்றிய அரசு செய்தி அனுப்பியுள்ளது. சில்வர் லைனுக்கு மாற்றாக வந்தே பாரத்தை ஊக்குவிக்க மாநிலத்தில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதற்கு பாஜக மாநில தலைவர்கள் தலைமை தாங்கினர். கூட்டாக யுடிஎப் மற்றும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியும் முயற்சித்தது. இருப்பினும், வந்தேபாரத்தின் கட்ட ணம், நேரங்கள் மற்றும் சேவைகளின் கணக்குகளை ஒப்பிடும் போது சில்வர் லைனின் முக்கியத்துவம் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டது. சில்வர் லைன் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கும் என சட்டப் பேரவையில் முதல்வர் தெளிவாக கூறியிருந்தார். இந்த திட்டம் செயல் படுத்த முடியாதது என்ற நிலைப் பாட்டை எந்த நிலையிலும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை. தீவிர அரசி யல் எதிர்ப்பு இருந்தபோதிலும், திட்டத் தை எதிர்க்கவோ அல்லது நிராக ரிக்கவோ ஒன்றிய அரசு தயாராக இல்லை. இதெல்லாம் கேரளாவில் நடந்த சில்வர் லைன் எதிர்ப்பு கல வரத்தால் மூடிமறைக்கப்பட்டன.