சென்னை,ஆக.3- தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக ளுக்காக கவுன்சிலிங் இரண்டு கட்டங்க ளாக நடைபெற்றது. இதன் மூலம் அனைத்து மருத்துவ படிப்பு இடங்களும் நிரப்பப் பட்டன. இந்த நிலையில் கவுன்சிலிங்கில் மருத்துவ படிப்பு இடங்களை பெற்று கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிடுவதாக இருந் தால் அபராதத் தொகை செலுத்த வேண் டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்கள், படிப்பை தொடர விரும்பாவிட்டால் இன்றுக்குள் (ஆகஸ்டு 3-ந் தேதி) கல்லூரியில் இருந்து விலகி அந்த இடங்களை திரும்ப ஒப்படைக்க லாம்.
நாளை மற்றும் நாளை மறுநாள் கல்லூரி யை விட்டு விலகும்பட்சத்தில் கவுன்சி லிங்கின்போது அளிக்கப்பட்ட உறுதிச் சான்றின்படி ரூ. 1 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும். ஆகஸ்டு 6 ஆம் தேதி அல்லது அதன்பிறகு கல்லூரிகளில் இருந்து விலகுபவர்கள் ரூ. 10 லட்சம் செலுத்த வேண்டும். அதேபோல் பி.டி.எஸ். மருத்துவ இடங்களை பெற்றவர்கள் படிப்பை தொடர விரும்பாவிட்டால் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் தங்களது இடங்களை திரும்ப ஒப்படைக்கலாம். ஆகஸ்டு 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் படிப்பை கைவிடும்பட் சத்தில் ரூ. 1 லட்சமும் அதன்பிறகு கல்லூரி யில் இருந்து விலகினால் ரூ. 10 லட்சமும் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.