what-they-told

img

முதுகு நெளிந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் அரசு மருத்துவமனை

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நெளிமுதுகு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் நெளிமுதுகு நோய் பற்றிய விழிப்புணர்வு மாதமாக அனு சரிக்கப்படுகிறது. மரபணுக் கோளாறு மனிதனின் முதுகுத் தண்டு அசாதாரணமாக வளைந்து நெளிந்து காணப்படுவதே நெளி முதுகு என்று அழைக்கப்படுகிறது. இந்நோயா னது குழந்தைகளையும், இளம் வயதினரையும் அதிகளவில் பாதிக்கிறது. இதனால் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நெளிமுதுகு நோய் ஏற்படுவதற்கு பல வகை யான காரணங்கள் இருப்பினும், இது ஒருவகை யான மரபணுக் கோளாறினால் ஏற்படும் பிறவிக் குறைபாடு என்று மருத்துவர்கள் தெரி விக்கின்றனர்.  நெளிமுதுகு நோயின் வெளிப்பாட்டால் மனிதனின் முதுகுத் தண்டு நேராக இல்லாமல் ‘எஸ்’ அல்லது ‘சி’ வடிவில் வளைந்து காணப் படும். இதன் விளைவாக தோள்கள் மற்றும் இடுப்பு சமமாக இல்லாமல், ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். முதுகுத்தண்டின் ஒரு பகுதியில் சீரற்ற தசை மண்டலம் இருப்பதாலும், முதுகின் ஒரு புறத்தில் முகடு ஏற்படுவதாலும் உடல் தோற்ற உருக்குலைவு ஏற்படும். அதனால் குழந்தைகளும் இளம் வயதினரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மேலும் முதுகுத் தண்டு வளைவின் காரணமாக குழந்தைகள் நேராக நிமிர்ந்து நிற்க முடியாமல் சிரமப்படுவ துண்டு.

மூச்சுவிடவும் சிரமம்

இந்நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்ட வர்களுக்கு நுரையீரல் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டு மூச்சு விடவும் சிரமப்படுவார்கள். முதுகுத்தண்டு நெளிவு சிலருக்கு நரம்பு சார்ந்த குறைபாடுகளையும் உபாதைகளையும் ஏற்படுத்தக் கூடும். நெளிமுதுகு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதுகுத்தண்டு வளைவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே  போகும் அபாயம் உள்ளது. சிறிய வளைவு களை விட பெரிய வளைவுகள் அதிக பாதிப்பை  ஏற்படுத்தக்கூடியவை. இதனால் இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தகுந்த சிகிச்சை மேற்கொள்வது மிக அவசியம்.

ஆரம்ப நிலையில் அறுவைச் சிகிச்சை அவசியமில்லை

குழந்தைகளின் வளர்ச்சிப் பருவத்தில் ஏற்படும் ஆரம்ப நிலை நெளிமுதுகினால் ஏற்படும் சிறிய வளைவுகளை உடற்பயிற்சி மற்றும் பிரேசிங் சிகிச்சை மூலம் முதுகுத்தண்டின் வளைவு மேற்கொண்டு அதிகரிக்காமல் கட்டுப் படுத்த முடியும். இந்நோய் முற்றிய நிலையில் காணப்படும் பெரிய வளைவுகளை அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்யலாம். நெளிமுகுது அறுவை சிகிச்சையில் தேர்ச்சிபெற்ற முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களால் மட்டுமே நெளிமுதுகை சீர் செய்ய முடியும். முதுகுத்தண்டு வளைவு சரி செய்யப்பட்டபின் குழந்தைகளின் தோற்ற உருக்குலைவு சீரடைந்து, எழிலான தோற்றத்துடன் அவர்கள் நேராக நிமிர்ந்து நிற்க முடியும். மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படு வதால், மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. சிகிச்சைக்குப் பிறகு குழந்தைகள் அன்றாட வேலைகளில் சிரமமின்றி ஈடுபடலாம்.

தென் மாநிலங்களிலிருந்தும்...

நெளிமுதுகு நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ மையங்கள் நம் நாட்டில் வெகு குறைவு. அத்தகைய சிறப்பு மையங்களுள் ஒன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.  இங்குள்ள எலும்பு முறிவு அறுவை சிகிச்சை துறையின் ஓர் அங்கமாக செயல்பட்டுவரும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைப் பிரிவு 2006ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டிலிருந்து நெளிமுதுகு நோய்க்கான சிகிச்சை இங்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் பிற தென் மாநிலங்களிலிருந்தும், அந்தமானிலிருந்தும் கூட சிகிச்சை பெற வருகின்றனர். இம்மையத்தின் நெளிமுதுகு நோய் பதிவேட்டில் இதுவரை 293 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2013ஆம் ஆண்டிலிருந்து, கடந்த பத்து வருடங்களாக இம்மையத்தின் நெளிமுகுது அறுவை சிகிச்சைக் குழுவும், மயக்கவியல் குழுவும் இணைந்து 142 நெளிமுதுகு நோயாளி களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.

தொழில்நுட்ப ஆய்வுகள்

மேலும் நெளிமுதுகு அறுவை சிகிச்சைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு உதவும் வகையில் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்புத் தொகை ஒதுக்கப் பட்டுள்ளது. நெளிமுதுகு சீர்செய்யும் அறுவை சிகிச்சையில் ஏற்படும் சிக்கல்களை முன்னறிந்து, அதைத் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் அறுவை கிசிச்சை செய்வதற்கான நவீன தொழில் நுட்பங்களையும் இங்குள்ள மருத்து வர்கள் மேற்கொள்கின்றனர். சென்னையி லுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து, நெளிமுதுகு நோய் சிகிச்சைக்கு  உதவும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி கள் இம்மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நெளிமுதுகு நோயினால் பாதிக் கப்பட்ட லதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 13 வயது சிறுமிக்கு தண்டுவட சீரமைப்பு  அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப் பட்டது. மிகவும் சிக்கலாக வளைந்திருந்த முதுகுத்தண்டை இங்குள்ள நெளிமுதுகு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சீர்செய்த பிறகு  தோற்ற உருக்குலைவு சீரடைந்து வீடு திரும்பி னார்.