what-they-told

img

ஈரோடு: 85 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல்

ஈரோடு, மார்ச் 19- ஈரோடு மாவட்டத்தில் 85 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரி வித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. முதலில் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட் டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து 12  முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயி ரத்து 161 பேர் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த பள்ளி களிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  ஈரோடு மாவட் டத்தில் இதுவரை மொத்தம் 85,601 சிறுவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கடந்த மாணவ, மாணவிகளுக்கு 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 15 வயது முதல் 18 வயதுடைய 64 ஆயிரத்து 783 மாணவ,மாணவிகளுக்கு 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகா தாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.