what-they-told

img

சென்னை குடிநீர் ஏரிகள் 94 விழுக்காடு நிரம்பியது

கிளியனூர்,ஜன.3- விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுக்காமல் அலைகழிக்கும், கிளிய னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்குட்பட்ட கிளியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் பயிர்க் கடன் வழங்காமல் அலைகழிக்கப்பட்டதை கண்டித்தும், கடன் கேட்டு மனு கொடுத்துள்ள அனைத்து விவ சாயிகளுக்கும் கடன் வழங்க வலியுறுத்தி யும் எடசேரி, கொஞ்சி மங்கலம், கிளியனூர், தைலாபுரம் உள்ளிட்ட  பகுதிகளை சேர்ந்த  விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் கடன் வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே. நடராஜன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் வடசேரி எம்.கோவிந்தசாமி, கொஞ்சி மங்கலம் எஸ்.மோகன்தஸ், கிளியனூர் வி.ராஜேந்திரன், தைலாபுரம் ஜி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செய லாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.அர்ஜூ னன், வட்ட செயலாளர் எம்.கே.முருகன் ஆகி யோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.