சென்னை, ஜூன் 20- தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக் கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத் துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சி யசை ஒட்டி இருக்கும்.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர், புதுவை, நாகப்பட்டினம், திருச்சி ராப்பள்ளி மற்றும் மதுரை மாவட் டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை ஒட்டி பதி வாகக்கூடும். தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி களில் 23 ஆம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீன வர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறி வுறுத்தப்பட்டுள்ளனர்.