சேலம், ஜன.31- சேலம் மாவட்டத் தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடுபவர்க ளுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த விவரங்கள் சேகரிக்கப் பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ள னர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.28 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 2வது தவணை தடுப்பூசி செலுத்தி, 90 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவின் இணையதளத்திலும் நடைமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2வது தவணை செலுத்தி 3 மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய அலுவலங்களில் பணிபுரிபவர்கள், முன்கள பணியாளராக இருப்பதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும், போலீசாரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பட்டியலில் இல்லாமல் நேரடியாக தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் ஒரு சிலர் இருக்கின்றனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் மூலமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறோம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலத்தில் கடந்த ஜன. 10 ஆம் தேதி முதல் மருத்துவ பணியாளர்கள், முன்கள் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலங்களில் பணிபுரிபவர்கள், போலீசார், முன்கள பணியாளர்கள் அடிப்படையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்படடவர் பணியாற்ற உள்ளனர். இவர்களில் முன்கள பணியாளர்கள் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை, தவிர மற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் அதிகாரிகள் மூலமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் விவரங்கள் தனியாக கேட்கப்பட்டுள்ளது. அந்த விவரங்கள் கிடைத்த பின்பு, அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும், எனவும் தெரிவித்தனர். மேலும், ஒரு சிலர் முதல் டோஸ் செலுத்தி கொண்டு, 2வது தவணைக்கும் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும். முதல் டோஸ் கூட செலுத்தி கொள்ளவில்லை என்றால், முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும். இதற்காக, தேர்தலில் பணியாற்றும் அனைவரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன்பின், அவர்கள் எத்தனை முறை தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள் என தெரிந்து கொண்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.