ஒரு சாரார் வெற்றியை எல்லை யில்லாமல் கொண்டாட, கத்தார் மைதானத்தின் ஒரு புறத்தில் பிரான்ஸ் வீரர் மாப்பே தரையில் உட்கார்ந்து தனது கால் முட்டிகளை கையால் கட்டிக் கொண்டு, அழாமல் தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அதே நேரம் அர்ஜெண்டினா அணி வீரர்கள் ஒருவருக்கொரு வர் கட்டித் தழுவி ஆரவாரம் செய்து கொண்டி ருந்தனர். தங்கள் நாட்டு கால்பந்து அமைப்பு அதிகாரி கிளாடியஸ் மைதானத்திற்குள் வந்த போது, சற்று பருமனான உடலைக் கொண்ட அவரை செங்குத்தாக தூக்கி தனது மகிழ்ச்சி யை வெளிப்படுத்தினார் மெஸ்ஸி. அவரது அம்மா, மற்றும் சில குழந்தைகளை கட்டிப் பிடித்து கொஞ்சினார். அன்பு, ஆசை, வெளிப் படுத்தல் கண்கொள்ளா காட்சிதான். ஆனால் தரையில் கால் முட்டுகளை கட்டிக் கொண்டிருந்த மாப்பேவுக்கு எதுவும் கேட்க வில்லை.
அதிர்ச்சியில் உறைந்திருந்தார். அப் போதுதான் அது நடந்தது. பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் மைதானத்திற்குள் தனியாக நடந்து வந்து மாப்பேவுக்கு பக்கத்தில் தரையில் வந்து அமர்ந்து அவரை கட்டிப் பிடித்து தலை முதல் ஆரம்பித்து தடவிக்கொடுத்து அவரை ஆசுவா சப்படுத்தி காதில் ஏதோ சொல்வது நமக்கு தெரி கிறது. ஆனாலும் மாப்பே அதே இருப்பு தான். அசையவேயில்லை. ஜனாதிபதியும் சளைக்கா மல் அவரை அமைதிப்படுத்திய காட்சிதான் கோப்பையை வென்றவர்களின் நிலைக்கு நிக ராகவோ மேலாகவோ சென்றுவிட்டதை உல கம் பார்த்தது. நடக்குமா நம் நாட்டில்? நமது நாட்டின் முதன்மையவர் வந்தால் நாம் மற்றதெல்லாம் மறந்து நமது அருகில் வந்து உட்காரும் வரை பொறுப்போமா? துள்ளிக் குதித்து எழுந்து பணி வும் அடக்கத்தையும் வெளிப்படுத்திடுவோம். அணியின் தோல்வியும், நாட்டின் தோல்வியை யும் விட தலைவர் பெரியவர். ஆனால் அந்த நிகழ்ச்சி முடியும் வரை எத்தனை முறை அணி வீரர்களையும், மாப்பேயையும் மெக்ரோன் சந் தித்தாரோ அத்தனை முறையும் கட்டித்தழுவி தன் தோளில் ஒவ்வொரு வீரரையும் கிடத்தி அமைதிப்படுத்தினார். அந்த கண்கொள்ளா காட்சியை இந்த உலகம் பார்த்தது. என்னே அன்யோன்யம்! வெற்றியை தோல்வி வெற்றி கொண்டது.
- எம்.ஏ.உசைன்