என்.வி. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட என். வெங்கடாசலம் தஞ்சை வட்டத்தைச் சேர்ந்த இராயமுண்டான்பட்டியில் 1925ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் தேதியன்று பிறந்தார். இளம் கம்யூனிஸ்ட் ஊழியராக தன் பணியைத் தொடங்கிய என்.வி. தன் நேரம் முழுவதையும் ஏழை, எளிய மக்களுக்காகவே குறிப்பாக அடித் தளத்தில் சமூகக் கொடுமையினால் மிதியுண்டு கிடந்த தாழ்த்தப்பட்ட மக்க ளைத் தலைநிமிர வைப்பதற்காகவே செலவிடலானார். தீண்டாமை கொடுமைக்கெதிராக இளம் வயது முதலே குமுறிக் கொண்டிருந்த அவர் அதை வெறும் சமூக சீர்திருத்தப் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் வர்க்கப் பிரச்சனையாகவும் பார்த்தார். அவர்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கும்ட அவர்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்ப தற்கும் அதே நேரத்தில் அவர்களின் கூலி உயர்வுக்குமான போராட்டங்க ளைக் கட்சியின் வழிகாட்டுதலின்படி நடத்தினார்.\
1959ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து மூன்று முறை ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பள்ளியக்ரஹாரம் கிராமத்தில் பரிசுத்த நாடாருக்குச் சொந்தமான நிலத்தின் குத்தகை விவசாயிகள் பெரும் கொடுமைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்பொழுது விவசாயிகள் சங்கம் அங்கே உரு வாக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் விவசாயிகள் மீது இரக்கம் கொண்ட பாதிரியார் ஒருவர் அந்தக் கொடுமை களை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். வெற்றி பெற முடிய வில்லை. தோழர் என்.வி.யைச் சந்தித்து நிலைமையைப் பாதிரியார் சொல்ல அந்த விவசாயிகளைக் கம்யூ னிஸ்ட் கட்சிதான் காப்பாற்ற முடியும் என்று கூறி ஒப்படைத்தார். தோழர் என்.வி. ஆட்சியருடன் பலமுறை வாதிட்டும் போராட்டங்களை நடத்தி யும் வெற்றி பெற்றார்.
1969ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த கேரள மாநிலத் தைச் சேர்ந்த அந்தோணி என்பவரும், அப்போது மாவட்ட காவல் கண்கா ணிப்பாளராக இருந்த வால்டர் தேவாரமும் முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கம் என்ற அமைப்பு துவங்கி குடியிருக்க இடமும் நிலமும் வேண்டும் என்ற கோரிக் கையை வைத்தனர். இந்தச் சூழலில் என்.வி. வெண்டையாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். மேற்கு வங்கத்தில் அஜய் முகர்ஜி தலைமையிலான அரசில் தோழர் ஜோதிபாசு துணை முதல்வராக பதவி வகித்தார் தோழர் ஜோதிபாசு. அதற்கு நிலமில்லாத ஏழை, எளிய மக்களுக்கு நிலங்களைப் பிரித்துக் கொடுக்கின்ற செய்தி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த என்.வி.க்கு மனதில் ஆழமாகப் பற்றிக் கொண்டு ஏன் நம்மால், நம் பகுதியில் இந்த நிலச்சீர்திருத்தங்களைச் செய்யக் கூடாது என்று ஆழ்மனதில் பட்டதை மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து வெண்டை யாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நிலத்தில் முன்னாள் இராணுவ வீரர்கள் 156 பேருக்கு தலா இரண்டு ஏக்கர் நிலமும் குடியிருக்க 5 சென்ட் இடமும் வழங்கப்பட்டு அந்தக் குடியிருப்புப் பகுதிக்கு திருவள்ளுவர் நகர் எனப் பெயரும் சூட்டினார். தோழர் என்.வி. வெண்டையாம்பட்டி ஊராட்சியில் உள்ள ஏரி புறம் போக்கு, அரசு புறம்போக்கு நிலங்க ளை தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் அளித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10ஆவது அகில இந்திய மாநாடு 1978ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெறுவதாயிருந்தது. அதன்பொ ருட்டுக் கட்சிக் கிளைகளின் மாநாடு கள் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தி லிருந்து நடைபெறத் துவங்கின. தஞ்சை வட்டத்திலும் கட்சிக்கிளை மாநாடுகள் ஒவ்வொன்றாக நடை பெறலாயின. செப்டம்பர் மாதம் 21ஆம் தேதியன்று செந்தலையில் கட்சிக் கிளை மாநாடு நடைபெற்றது. மாநாடு முடிந்து சொந்த ஊருக்குப் புறப்பட்ட தோழர் என்.வி. வீட்டுக்கும் வர வில்லை, கட்சி அலுவலகத்திற்கும் வர வில்லை. என்.வி.யைக் காணவில்லை என்ற செய்தி காட்டுத்தீயைப் போல் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாகத் தம் தலைவரைத் தேடுகின்றனர். என்.வி. எங்கும் கிடைக்கவில்லை. சாதி ஆதிக்க சக்தியினர் கடத்தி அவரை கொலை செய்துவிட்டனர். இந்தக் கொடுமையைக் கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்தன.
தியாகி என்.வி. என்று அன்புடன் போற்றப்படும் தோழர் என். வெங்கடா சலம் அவர்கள் ஒன்றாக இருந்த தஞ்சை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக, தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவராகத் தொண்டாற்றியவர். 1961ஆம் ஆண்டு நிலஉச்சவரம்பு சட்டத்திருத்தம் கோரி நடைபெற்ற அறப்போரில் பங்கேற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1965-66ஆம் ஆண்டு நாடு முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைக் காங்கிரஸ் அரசு பாது காப்புக் கைதிகளாக சிறையில் அடைத்த காலத்திலும் தோழர் என்.வி. கடலூர் மத்திய சிறையில் இருந்தார். அதன்பிறகு அவசரகால நிலை யின்போது கைது செய்யப்பட்டு மிசா கைதியாக ஓராண்டு காலம் திருச்சி மத்திய சிறையில் இருந்தார். அவர் தனது வாழ்நாளில் எங்கு தவறு நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கத் தவறியதில்லை.
நிகழ்காலம் என்பது கடந்த காலத்தில் குழந்தை. எதிர்காலத்தின் தாய் என்பார்கள். நிகழ்காலத்தில் மக்கள் இயக்கத்தில் பங்கு கொள்ளும் எவரும், ஆர்வங்கொள் ளும் எவரும் கடந்த கால அனுபவங்க ளை உள்வாங்கிக் கொள்ளாமல் நிலை மையைப் புரிந்து கொள்வதோ, உறுதி யான நிலை எடுத்து தலையிடுவதோ சாத்தியமல்ல. இப்படி கடந்த காலத் தலைவர்களின் வாழ்க்கை அனு பவத்தை, போராட்டத்தை, தியா கத்தை, படிப்பினைகளை அறிந்து கொள்ளுதல் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. நாம் கடந்த வந்த பாதையை அறிந்துகொள்வது எதிர்வரும் பயணத்தைச் சந்திக்க நமக்குத் தெம்பும் திராணியும் அளிக்கும். இடது சாரி இயக்கத்திற்கும், மக்கள் ஜன நாயக இயக்கத்திற்கும் உத்வேகம் தரக்கூடிய நெஞ்சில் நிலைத்து வாழ்ந்திருக்கும் ஜீவன் தியாகி என். வெங்கடாசலம்.
சொரக்குடிப்பட்டி
எஸ்.ஞானமாணிக்கம்