உதகை, டிச.7- கூடலூர் வனச்சரகத்தில் சேற்றில் சிக்கி ஒன்றரை வயது குட்டியானை உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வ லர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் வனச்சரகம், வாச்சிக் கொல்லி பீட்டில் சோமன் வயலில் சேற்றில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத் துவக் குழுவினர் யானையை உடல் கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா். மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற் கொண்டனர். இதில் இறந்து கிடந்தது, ஒன்றரை வயதுடைய ஆண் யானை குட்டி என்றும், நோய் தொற்று காரணமாக இந்த குட்டி யானை இறந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்த னர்.