சென்னை, மே 12- தென்மேற்கு பருவமழை வரும் 16 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திரு வாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக் குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலை காணப்ப டும். திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர், திருத்தணியில் வெயில் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். அந்தமான் பகுதியில் உள்ள மேல டுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாற உள்ளது. அந்தமான் நிகோபார் பகுதி களில் வரும் 16 ஆம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு என தெரி வித்துள்ளது.