சென்னை, பிப். 6- சீனாவில் இருந்து வந்த 2 மருத்துவ மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை யடுத்து அவர்களுக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என மருத்து வர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றாலும் தொடர் கண்காணிப் பில் வெளிநாட்டு பயணிகளும் தமிழகத்தை சேர்ந்தவர்களும் இருந்து வருகிறார்கள். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனை, திருவாரூர், விழுப்புரம், கன்னியாகுமரி அரசு மருத்து வக்கல்லூரிகளில் மொத்தம் 7 பேர் அனு மதிக்கப்பட்டு உள்ளனர். சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்த இவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு ரத்தம், சளி மாதிரி எடுக்கப் பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரையில் பரிசோதனை முடிவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் புதனன்று இரவு 2 மருத்துவ மாணவிகள் திடீர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டனர். ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்த லாவண்யா (28), சவுந்தர்யா (25) ஆகிய இருவரும் சகோத ரிகள்.
சீனாவில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவர்கள் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் அவர்கள் கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு சென்னை வந்தனர். மருத்து வர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர்களுக்கு நேற்று காய்ச்சல் பாதிப்பு வந்ததையடுத்து ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கிண்டி கிங் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு வார்டில் டாக்டர்களின் கண்காணிப்பில் அவர்கள் இருந்து வருகின்றனர். இது தவிர சீனாவைச் சேர்ந்த 2 பேரும் அங்கு சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டவர்கள் என்று ஸ்டாலின் மருத்துவமனை நிர்வாகம் தெரி வித்துள்ளது.