ஈரோடு,ஜூலை 1- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி யுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஜூலை 1 முதல் வாரத்தில் வெளியாகும் என தெரி விக்கப்பட்டிருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடு வதில் சிக்கல் உள்ளது. முதலமை ச்சரிடம் ஆலோசித்த பிறகே பிளஸ்-2 தேர்வு முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.