சென்னை, ஜூலை 20- அரசு ஊழியர், ஆசிரியர் களுக்கான பண்டிகை முன் பணம் 5 ஆயிரம் ரூபாயிலி ருந்து 10ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணை விரை வில் வெளியிடப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார். பேரவையில் சனிக்கிழ மையன்று (ஜூலை 20) தமது துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதி லளித்துபேசிய ஓ.பன்னீர்செல் வம், ஊதிய முரண்பாடு களை களைய அமைக்கப் பட்ட குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளது. அரசு ஆய்வுக்குபின் அது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்றார். பணியாளர் சீரமைப்புக் குழுவின் அறிக்கை பெறப் பட்டுள்ளது. தற்போதுள்ள ஊழியர்களை பாதிக்காத வகையில் அந்த அறிக்கை செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஓய்வூதி யருக்கான பண்டிகை முன் பணம் 2 ஆயிரம் ரூபாயிலி ருந்து 4ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.