சென்னை, செப்.23- இடைத்தேர்தல் நடை பெறவுள்ள தொகுதிகளுக்கு உரிய ஆவணங்களுடன் மட்டுமே தீபாவளி பரிசு பொருட்களை எடுத்து செல்லச் வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு தேவை யான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இடைத்தேர்தல் நடை முறைகள் குறித்து விழுப்பு ரம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாவும் சாகு கூறி னார். தீபாவளி அக்டோபர் 27 ஆம் தேதி கொண்டாடப்பட வுள்ள நிலையில் பரிசுப் பொருட்களை உரிய ஆவ ணங்களுடன் கொண்டு செல்லலாம் என்றும் ஆவ ணம் இல்லை என்றால் பரிசு பொருட்கள் பறிமுதல் செய் யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டமன்ற இடைத்தேர் தல் நடைபெறவுள்ள விக்கிர வாண்டி தொகுதியில் 275 வாக்குசாவடிகளும் நாங்கு நேரி தொகுதியில் 299 வாக் குச்சாவடிகளும் அமைக் கப்படவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 2 தொகுதிகளிலும் தலா 3 பறக்கும் படைகள், 3 நிலைக் குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என் றும் சத்யபிரத சாகு குறிப் பிட்டுள்ளார். இடைத் தேர் தல் நடைபெறவுள்ள மாவட் டத்தின் மற்ற இடங்களில் தலா ஒரு பறக்கும் படை மற்றும் நிலைக் குழு தேர்தல் பணி யில் ஈடுபடும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.