சென்னை, செப்.26- பள்ளி விடுமுறை நாட்களில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை கொண்டு பண்பாடு, கலாச்சாரம் தொடர்பாக வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தி யாளர்களைச் சந்தித்த அவர், “தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மூலம் பாடம் நடத்தும் திட்டம், அடுத்த மாத இறுதிக்குள் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அமல்ப டுத்தப்படும்” என்றார். மேல்நிலைப் பள்ளிகளுக்கு 20 கணினி களும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு 10 கணினிகளும் விரைவில் வழங்க நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். கர்நாடக மாநிலத்தில் தமிழ் ஆசிரியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை தொடர்பாக அந்த மாநில முதலமைச்சர், தங்களுக்கு கடிதம் எழுதினால் ஆலோ சிக்கப்படும் என்றார்.