இளம் வழக்கறிஞர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் (ஏஐஎல்யு) நீண்ட காலமாக வலி யுறுத்தி வருகிறது. ஏஐஎல்யுவின் மாநாடுகளி லும், போராட்டங்களிலும், அரசுடனான பேச்சுவார்த்தைகளிலும் முதல் கோரிக்கை யாக இதை வைத்த போதும், இளம் வழக்கறி ஞர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி சகலதரப்பு மக்களையும் வாட்டி வதைக்கிறது. அதற்கு வழக்கறிஞர்கள் விதிவிலக்கு அல்ல. வழக்கறிஞர் சமுதாய மும் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக உள்ளது. குறிப்பாக முதல் தலைமுறையைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் பயிற்சிக் காலத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள படும் அவதி சொல்லி மாளாது.
மூன்றாண்டு அல்லது ஐந்தாண்டு சட்டப்படிப்பு முடிந்த பிறகு, பெரும்பான்மை யான வழக்கறிஞர்கள் மிகுந்த சிரமத்திற்கி டையே தான் பார் கவுன்சில் உறுப்பினராக பதிவு செய்து கொள்கின்றனர். பார்கவுன்சி லில் உறுப்பினராவது என்பது அதிக செல வாகும் விசயமாக மாறி வருகிறது. இது தவிர கடந்த சில வருடங்களாக தகுதித் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இளம் வழக்கறிஞர்கள் மீது சுமத்தப்படுகிறது. இதனால் சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கிய இளம் வழக்கறிஞர்களுக்கு இத்தடை களை தாண்டி வருவது குதிரைக் கொம்பாகி விடுகிறது. பட்டம் பெற்றாலும், பார்கவுன்சில் உறுப்பினராக முடியாத, தகுதி தேர்வு எழுத முடியாத நிறைய பேர் வழக்கறிஞர் அல்லாத பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவது மிகவும் கவலைக்குரிய விசயம் ஆகும். பொதுவாக, மூத்த வழக்கறிஞர் அலுவல கங்களில் பயிற்சி பெறுவதற்கு வசதியாக இளம் வழக்கறிஞர்களுக்கு இடம் கிடைப்ப திலும் கடும் போட்டி நிலவுகிறது. குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரையான பயிற்சிக் காலத்தில் அடிப்படைத் தேவை களை நிறைவேற்றவும் வருமானமின்றி வழி தவறிப் போய்விடும் இளம் வழக்கறி ஞர்கள் ஏராளம். தங்களின் சுய கௌரவத்தை யும், தகுதியையும் இழந்து காவல் நிலை யங்களிலும், கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடங்களிலும் இளம் வழக்கறிஞர்கள் தங்கள் முகவரிகளைத் தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர்.
கசங்கிப் போன கோட்டும், கவுனும் அழுக்கடைந்த நெக் பேண்டும், காலில் ரப்பர் செருப்பும், வாரக்கணக்கில் மழிக்காத தாடியுமாக இளம் வழக்கறிஞர்கள் நீதி மன்ற வளாகங்களில் திரிவதை சாதாரண மாக பார்க்க முடியும். இதில் பெண் வழக்கறி ஞர்கள் நிலைமை அதைவிட மோசம் ஆகும். ஒரு வேளை தேநீருக்காக கட்சிக்காரர்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும் இளம் வழக்கறிஞர்களும் இருக்கத்தான் செய்கி றார்கள். படிக்கும் காலத்தில் அவர்களுக்கு உன்னத தொழில் (noole profession) என கட்டமைக்கப்பட்ட வழக்கறிஞர் தொழில் மீதிருந்த கனவுகள், நம்பிக்கைகள் அனைத்தும் பயிற்சிக்காலத்தில் சுக்கு நூறாக உடைந்து போகிறது. வறுமையினால் தொழி லில் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியே றிய இளம் வழக்கறிஞர்கள் சமூக விரோதிக ளின் கைகளில் ஆயதமாகும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.
இளம் வழக்கறிஞர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டே, பயிற்சியில் முழுக்கவனமும் செலுத்தி குறைந்தபட்ச நிதி உதவியாவது அரசு வழங்க வேண்டும். வழக்கறிஞர்கள் உன்னதமான தொழிலின் “பெருமைக்கு பங்கம் விளைவிக்கிறார்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள், அவர்களை கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என கூப்பாடு போடும் சில நீதிபதிகள் இளம் வழக்கறிஞர்களின் யாதார்த்த நிலையை கருத்தில் கொண்டு பேசுவற்கோ, அதற்கு மாற்று யோசனை சொல்வதற்கோ தயாராக இல்லை. இடதுசாரிகளின் தலைமையிலான தோழர்.பினராயி விஜயனின் கேரள அரசு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் முன்னுதாரண மாக திகழ்கிறது. முப்பது வயதுக்கு உட்பட்ட இளம் வழக்கறிஞர்களுக்கு மூன்று வருட பயிற்சிக் காலத்திற்கு மாதம் ரூ.5,000 வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது போன்று புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநி லங்களும் கூட இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க முன்வந்துள்ளன. ஆனால் தமிழக அரசு மட்டும் உதவித் தொகை வழங்க தயக்கம் காட்டுகிறது.
ஆகவே, திருவண்ணாமலையில் நடந்த அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு, எப்பாடுபட்டாவது தமிழக இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை பெற்றே தீரவேண்டும் என தீர்மானம் நிறை வேற்றியது. அதன் தொடர்ச்சியாக வரும் 21ஆம் தேதி விழுப்புரத்தில், “தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்களின் கோரிக்கை” மாநாட்டை நடத்த உள்ளது. நீதித்துறையின் விரிந்த வானில் பறக்கத் துடிக்கும் இளம் வழக்கறி ஞர்களின் இறகுகளுக்கு வலுச்சேர்க்க, வழக்கறிஞர் பெருமக்களை வருக வருக வென விழுப்புரம் நோக்கி ஏஐஎல்யு அழைக்கிறது.
கட்டுரையாளர் : வழக்கறிஞர், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில துணைத்தலைவர்