தஞ்சாவூர் டிச.9- தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் பிப்.5-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளதாகவும், அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாக வும் தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் பெரிய கோயிலில் கடந்த 1997-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 23 ஆண்டு கழித்து கும்பாபிஷேகம் நடத்திட பணி நடைபெற்று வருகிறது. கும்பாபி ஷேகத்தினை முன்னிட்டு கடந்த 2-ஆம் தேதி விழா ஏற்பாடுகள் துவங்கின. இந்நிலையில் திங்கள்கிழமை தஞ்சா வூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆகியோர் பெரிய கோயி லை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜெ.லோக நாதன் கூறியதாவது:
பெரிய கோயிலில் வரும் பிப்.5- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை முதற்கட்டமாக ஆய்வு செய்து வருகிறோம். கோயி லுக்கு முக்கிய விருந்தினர்கள், பக்தர்கள் வந்து செல்லும் வழி, வாகனங்கள் நிறுத்திட இடத்தை தேர்வு செய்து வருகிறோம். கோயில் கோபுரம் வெளியே தெரிவதால், பக்தர்கள் கோயிலுக்குள் வருவதை காட்டிலும் வெளியே நின்று தரிசிப்பார்கள், அது எந்தந்த இடங்கள் எனவும் கணக்கெடுக்கப்பட்டு வரு கிறது. கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்து வருவதால், எவ்வளவு காவல்துறையினர் வரவழைக்கப்படுவது என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்றார். ஆய்வின் போது, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே, தஞ்சாவூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் எம்.ரவிச்சந்திரன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
‘மூடநம்பிக்கை’
பெரிய கோயிலுக்கு அரசியல்வாதிகள் வந்து சென்றால் அவர்களது பதவி நீடிக்காது என்பது போன்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்த மூடநம்பிக்கை காரணமாக ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் பலரும் இங்கு வந்து செல்ல தயங்குகின்றனர். இதனால் பெரிய கோயில் கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் தொடங்கியும் இதுவரை கும்பாபிஷேக தேதியை அறிவிக்காமல் அரசு தயக்கம் காட்டுவதாக மக்கள் கூறி வந்தனர். மேலும் முன்கூட்டிய கும்பாபிஷேக தேதியை அறிவித்தால் வெளியூர் மற்றும் பல்வேறு மாநில மக்கள் விழாவில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என கோரிக்கை விடுக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.