what-they-told

img

புயல் எதிரொலி: கோயம்பேடு சந்தையில் தேக்கமடைந்த காய்கறிகள்

சென்னை,டிச.9- மாண்டஸ் புயல காரணமாக சென்னை யில் வெள்ளிக்கிழமை (டிச.9) விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கோயம்பேடு மொத்தகாய்கறி சந்தைக்கு  காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் எண்ணிக்கை வெகுவாக  குறைந்தது. மேலும்   2 ஆயிரம் டன் காய்கறிகள் தேக்கமடைந்த தால் வியாபாரிகள் வேதனையடைந்தனர். வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயலால் சென்னை உட்பட வட தமிழ கத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த  மழை பெய்து வருகிறது. சென்னை மாநக ரில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் வியாபாரிகள் காய்கறி வாங்க வர முடியாததால் கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட்டில் 2000 டன்  காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்க மடைந்தது. நாள் ஒன்றுக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சுமார் 5000 டன் அளவிலான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். தொடர் மழை யால், காய்கறிகள் வாங்க வரும் வியாபாரி களால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் பல ஆயிரம் கிலோ காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். காய்கறிகள் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 20 ரூபாய் வரை  விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய்க்கு  விற்பனையானது. அதே போல், 22 ரூபாய்  வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் 14 ரூபாய் வரைக்கும் குறைந்துவிட்டது. முட்டைக்கோஸ் 6 ரூபாய்க்கும் பீன்ஸ் 15 ரூபாய்க்கும் விற்பனையானது.