புதுதில்லி, மே 14- கர்நாடகாவில் பாஜக வின் தோல்வியை, போராட் டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் விமர்சித்துள்ளனர். மக்கள் சொல்வதைக் கேட் கத் தயாராக இல்லை என் றால் பாஜக இன்னும் தோற் றுப் போகும் என்றும், தங்க ளுக்குத் தீங்கிழைத்ததற்குக் கிடைத்த தண்டனை என்றும் விளையாட்டு வீரர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித் தார். ஒன்றிய அரசின் கொள்கை நாட்டுக்கு நல்லதல்ல. ஒலிம் பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை எப்படி புறக்க ணிக்க முடியும்? மற்ற மாநி லங்களிலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் தோற்கும் முன், பாஜக, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர். அதே நேரத்தில், பொரு ளாதார நிபுணர் பிரபாத் பட் நாயக் போராட்ட மேடையை அடைந்து வீரர்களுக்கு தனது ஆதரவை அறிவித் தார். எஸ்எப்ஐ பொதுச் செய லாளர் மயூக் பிஸ்வாஸ், தலைவர் வி பி சானு, ஏஐ எஸ்எப் பொதுச் செயலாளர் விக்கி மகேஸ்வரி, திமுக மாணவர் முன்னணி தலை வர் சிவிஎம்கே இளவரசன் எம்எல்ஏ, பிஎஸ்யு பொதுச் செயலாளர் நௌஃபல் முக மது சைபுல்லா ஆகியோரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர். ஞாயி றன்று எஸ்எப்ஐ தலைமை யில் போராட்டம் நடத்தும் இடத்துக்கு மாணவர்கள் சென் றனர். இதுதவிர, சிஐடியு, மாதர் சங்கம், டிஒய்எப்ஐ, விவசாயத் தொழிலாளர் சங் கம் ஆகியவற்றுடன் இணைந்து வரும் 18ஆம் தேதி நாடு தழு விய மெழுகுவர்த்தி ஊர்வ லத்தையும் எஸ்எப்ஐ நடத்து கிறது.