what-they-told

img

காந்தி அருங்காட்சியக பத்திரிகை சாவர்க்கர் சிறப்பிதழ் வெளியீடு

பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான ஒன்றிய பாஜக அரசு, காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதியை (நினைவு அருங்காட்சியகம்) மேற்பார்வை செய்துவருகிறது.  1948- ஆம் ஆண்டு காந்தி படு கொலை செய்யப்பட்டதற்குப் பின்பு அவருக்கு இந்த அருங்காட்சி யம் அர்ப்பணிக்கப்பட்டது. அத்து டன் ராஜ்காட்டில் உள்ள காந்தி தர்ஷன், நினைவிடமாக மாற்றப் பட்டது.

காந்தி நினைவு அருங்காட்சிய கம் சார்பில் வெளியாகும் இந்தி மொழி மாத இதழான அண்டிம் ஜன் (Antim Jan) காந்தியின் கொள்கை யைச் சிதைத்து காவியாக மாற்றப் படுகிறது. ஜூன் மாத இதழ் (மே 28-ஆம் தேதி  சாவர்க்கரின் பிறந்த நாள்) காவிக் கூட்டத்தின் பிதா மகன் விநாயக் தாமோதர் சாவர்க்க ருக்கு  அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  அந்த இதழின் அட்டையில் சாவர்க்கர் படம் இடம் பெற்றுள்ளது. இந்த இதழில், சாவர்க்கரின் இந்துத்துவா நிலைபாடு, மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்,  சாவர்க்கர் குறித்து எழுதிய  கட்டு ரைகள் இடம்பெற்றுள்ளன.  சாவர்க் கரின் “இந்துத்வா” என்ற புத்தகத் தில் இருந்து ஒரு பகுதி “தேசபக்தர் சாவர்க்கர்” என்ற தலைப்பில் கட்டு ரையாக மாற்றப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி குறித்து பிற எழுத்தாளர்கள் எழுதிய  கட்டுரைக ளும் இந்த இதழில் இடம் பெற்றுள் ளன. இதழின் ஆசிரியரான பிரவீன் தத் சர்மாவின் “காந்தி கா குஸ்ஸா” (காந்தியின் கோபம்) என்ற கட்டு ரையும் இடம் பெற்றுள்ளது. காந்தி நினைவு அருங்காட்சிய கத்தின் இந்த நடவடிக்கை காந்திய வாதிகள், அரசியல் கட்சித் தலை வர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீர சாவர்க்கர் தியாகியாம்...

காந்தி அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் விஜய் கோயல் கூறுகையில், “மே 28-ஆம் தேதி சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால் பத்திரிகையின் கருப்பொருள் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. “வீர சாவர்க்கர் ஒரு சிறந்த மனிதர்”. காந்தியும் அப்படித்தான். பட்டே லும் அப்படித்தான். அவர்களின் தியாகத்திலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாவர்க்கரைப் போல் சிறைக் கம்பிகளுக்குப் பின் னால் அதிக காலம் இருந்தவர்கள் யாரும் இல்லை என்றார். சிறையிலிருந்தபோது ஆங்கி லேயர்களிடம் மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டுத்தானே வெளியே வந்தார் சாவர்க்கர் என்று கேட்டதற்கு  இந்தப் பிரச்சனை  “தியாகம் செய்யாதவர்களால்” தொ டர்ந்து எழுப்பப்படுகிறது என்றார்.  மேலும் அவர் கூறுகையில், “சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அர்ப்பணிப்பு” என்ற தன்மையில்  சிறப்பு இதழ்கள்  தொடர்ந்து  வெளியாகும். ஆகஸ்ட் மாத இதழ் “75-ஆவது ஆண்டு சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற கருப் பொருள் பிரதானமாக இருக்கும் என்றார்.

பாஜக-வின்  அற்பத்தனமான செயல்

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கூறுகையில், “ காந்திய நிறுவனத் தில் இது போன்ற வரலாற்றுத் திரிபுகள் தொடர்ந்து நடைபெறும். காந்தியின் சித்தாந்தத்தை, அவரது அரசியல் சித்தாந்தத்தை காணாமல் போகச் செய்யும் அபாயம் உள்ளது. சாவர்க்கரை காந்தியுடன் ஒப்பிடு வது “பாஜக-வின் அவ நம்பிக்கையை வெளிப்படுத்துகி றது.” காந்தியைப் பற்றிய அவர்க ளின் சிந்தனையும், நம்பிக்கையும் எவ்வளவு அற்பமானது என்பதைக் காட்டுகிறது. காந்திய சித்தாந் தத்தை சிதைத்து, ஒன்றிய அர சுக்கு வசதியாக ஒரு புதிய கதையை உருவாக்கும் திட்டமிடட்ட நடவ டிக்கை” இதற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம் என்றார்.

சாவர்க்கர் சிங்கமாம்'

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “மற்ற நிறுவனங்களைச் சீரழிப்ப துடன்  “காந்தி அருங்காட்சியகத்தை” யும் சீரழிக்க ஒன்றிய அரசு முயற் சிக்கிறது. “சாவர்க்கர் சிங்கமாகச் சித்தரிக்கப்படுகிறார்.  இதுதான் ஆர்எஸ்எஸ்-சின் செயல்திட்டம்.  பாஜக அரசாங்கத்தை திருப்திப் படுத்த காந்திய நிறுவனத்தால் நாட்டின்  உண்மை வரலாறு திரிக்கப் படுகிறது. இது துரதிர்ஷ்டவசமானது. மகாத்மா காந்தியின் கொலை க்குப் பின்னால் உள்ள சதி குறித்து விவாதிக்கும் காந்தியின் கொலை யாளி “தி மேக்கிங் ஆஃப் நாதுராம் கோட்சே அண்ட் ஹிஸ் ஐடியா ஆஃப் இந்தியா”  கட்டுரையாளரும் பத்திரிகையாளருமான திரேந்திர கே.ஜா, “மகாத்மா காந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட வர் சாவர்க்கர். ஆனால், அவர்  மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக் கப்படாததால் அவர் விடுவிக்கப் பட்டார் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில்,  மகாத்மா காந்தி கொலையின் சதி  சரியாக விசாரிக்கப்படவில்லை. இதற்காக 1966-ஆம் ஆண்டு விசா ரணை ஆணையம் அமைக்கப் பட்டது. இது சாவர்க்கரும் அவ ருக்குக் கீழ் இருந்த குழுவினரும் காந்தியைக் கொல்லத் திட்டமிட்ட னர் என்று  தெளிவாகக் கூறியது என்றார்.