what-they-told

img

56 இன்ச் மோடி சாப்பாடு; 40 நிமிடத்தில் சாப்பிட வேண்டும்

புதுதில்லி, செப்.17- மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, லுட்டியன் தில்லி யிலுள்ள ஓர் உணவகம் ’56 இஞ்ச்  மோடிஜீ தாலி’ எனும் சாப்பாட்டு விருந்தை செப்டம்பர் 17 முதல் 26 வரை 10 நாட்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. கன்னாட் பிளேஸிலுள்ள ’அர்டோர் 2.1’ எனும் உணவகத்தில் வழங்கப்படும் இந்த விருந்தில் 20 வகையான கூட்டுக் கறிகள், ரொட்டிகள், தால் வகைகள், உட்  பட 56 வட இந்திய வகை உணவு கள் பரிமாறப்பட உள்ளன. இந்த மாபெரும் விருந்தை 40 நிமிடத்தில் இருவராய்ச் சேர்ந்து  சாப்பிடுபவருக்கு 8.5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்; மேலும், வெற்றி பெரும் இருவருக்கு நரேந்  திர மோடிக்கு பிடித்த சுற்றுலாத்  தலமான கேதர்நாத் செல்வதற் கான டிக்கெட்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த உணவகத் தின் உரிமையாளர் சுவீட் கல்ரா  கூறுகையில், “நாங்கள் பிரதமர்  நரேந்திர மோடியின் ரசிகர்கள். எங்  கள் உணவகத்தில் நாங்கள் வழங் கும் விருந்துகள் மக்களிடையே என்றும் பிரபலம். இந்நிலையில், தற்போது வருகிற நரேந்திர மோடி யின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இந்த ’56 இஞ்ச் மோடி  ஜீ’ விருந்தை வழங்கவுள்ளோம். அவர் இந்த நாட்டிற்குச் செய்த தொண்டிற்கு மரியாதை செலுத்  தும் வகையில் இதை எங்கள் உண வகத்தில் அறிமுகப்படுத்தி உள் ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

விலைவாசியை மோடி குறைக்க வேண்டும்

மேலும் விரைவில் நாட்டின் விலைவாசி ஏற்றத்தை குறைக்கச் சொல்லி கோரிக்கை விடுக்கும் வகையில், ஒரு உணவு விருந்தை தங்கள் உணவகத்தில் அறிமுகப்  படுத்த உள்ளதாகவும் கூறியிருக் கும் அந்த ஹோட்டல் முதலாளி, “இந்த விருந்தின் வாயிலாக விலைவாசி உயர்வைக் குறைக்குமாறு பிரதமர் நரேந்திர  மோடியைக் கேட்டுக் கொள்கி றோம்” என்றும் தெரிவித்துள்ளார். இந்த உணவகத்தில் ஏற்க னவே, புஷ்பா தாலி, பாகுபலி தாலி என்ற பெயரில் உணவு விருந்து  வழங்கப்பட்டு வருவது குறிப்பி டத்தக்கது.

;