புதுதில்லி,ஜூன் 18- கொரோனா சிகிச்சைக்காக முதல்கட்டமாக, 5 மாநிலங்களுக்கு 960 ரயில் பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கிக் கொடுத்துள்ளது. கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகளுடன் ஆயி ரக்கணக்கான ரயில் பெட்டிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் மருத்துவமனை படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு பயன்படுத்துவதற்காக, இவை இருப்பில் வைக்கப்பட்டன.
இந்நிலையில், முதல்கட்ட மாக, 5 மாநிலங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், அவற்றுக்கு 960 ரயில் பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கிக்கொடுத்துள்ளது. தில்லிக்கு மட்டும் 503 பெட்டிகள் அளிக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிர தேசத்துக்கு 372 பெட்டிகளும், தெலுங்கானாவுக்கு 60 பெட்டி களும், ஆந்திராவுக்கு 20 பெட்டி களும், மத்தியப்பிரதேசத்துக்கு 5 பெட்டிகளும் அளிக்கப்பட்டுள்ளன. இப்பெட்டிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள், போர்வைகள், கொசு வலைகள், குளியலறைகள், சார்ஜ் ஏற்றும் பாயிண்ட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.