what-they-told

img

இந்தியாவில் கொரோனா இறப்பு உலக சராசரியை விட குறைவு

புதுதில்லி, ஜூலை 20- கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) முதன்முறையாக 2.5 சதவிகிதத்துக்கும் கீழாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இறப்பு விகிதம் 2.49 சதவிகிதமாக உள்ளது. இது, உலக சராசரியை விட 1.78 சதவிகிதம் குறைவு என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இறப்பு விகிதம் தேசிய சராசரிக்கும் குறைவாக உள்ளது. 14 மாநிலங்களில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

நோயாளிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் 24-72 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் தெரிவிப்பது ஆகிய காரணங்களால் இறப்பு விகிதம் குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தேசிய சராசரியை விட இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் சில இறப்புகள் “தவிர்க்கக்கூடியவை” என்று தொற்றுநோயைக் கண்காணிக்கும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. மகாராஷ்டிரம் (3.85), குஜராத் (4.48) மற்றும் மேற்கு வங்கம் (2.67) ஆகிய மாநிலங்களில் இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்களில், பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனைகளுக்குத் தாமதமாக வந்து கொண்டிருப்பதாலும், கண்காணிப்பு பலவீனமாக இருப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த இயலாமல் இருப்பதாலும் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.