weather

img

மோக்கா புயல் நாளை கரையைக் கடக்கிறது

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அதி தீவிர புயலான மோக்கா புயல் நாளை நண்பகலில் கரையைக் கடக்கவுள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் தற்போது நாளை நண்பகலில் கரையைக் கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் ஏற்படும் வெப்ப சலனத்தால் மே 12 முதல் மே 16 வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது