சென்னை,அக்டோபர்.16- எச்சரிக்கையை மீறி கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் கடலுக்குச் செல்ல வேண்டுமென மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில மீனவர்கள் கடலுக்குச் செல்வதாகப் புகார் எழுந்துள்ளதையடுத்து, அரசின் எச்சரிக்கையை மீறி கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என என மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.