weather

img

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்திலும் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அன்றைய தினங்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.