weather

img

பருவ மழை தொடரும்: வானிலை மையம்...

சென்னை:
வடகிழக்குப் பருவக் காற்று காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது

வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், ‘வடகிழக்குப் பருவக் காற்று காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.சென்னை, புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத் திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.அடுத்த 48 மணி நேரத் திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

;