மதுராந்தகம், பிப்.20- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வையாவூர் ஊராட்சிக்குட்பட்ட வையாவூர், மலை வையாவூர், பட்டுவாரி நகர், மாம்பட்டு, காந்திநகர் இடும்பைத் தோப்பு, கொளம்பாக்கம், மூசிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 140 பேருக்கு வழங் கப்பட்ட குடிமனை பட்டாக்கள், கிராம அடங்க ளில் இதுவரையிலும் பதிவேற்றம் செய் யப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அரசின் நலத் திட்டங்களான தொகுப்பு வீடுகள் கட்ட முடியா மல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதே போன்று பல குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலை யில் குடிமனை பட்டா வழங்கப்பட்ட வர்களுக்கு அடங்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும், குடிமனை பட்டா இல்லாத வர்களுக்கு அரசாணை 318ன் படி குடிமனை பட்டா வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில் வையாவூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு வியாழ னன்று (பிப் 20) காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், மாவட்டச் செயலாளர் கே.நேரு, மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே.வாசுதேவன், விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டச் செயலாளர் சசிக்குமார், ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்டச் செயலாளர் இந்திரா, வட்டத் தலைவர் கலையரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவலறிந்து வந்த மதுராந்தகம் வட்டாட்சி யர் வேல்முருகன் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இப்பேச்சு வார்த்தையில் ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தன் பேரில் போராட்டம் தற்காலி கமாக கைவிடப்பட்டது.