செங்கல்பட்டில் துவக்க நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ள உயிர்காக்கும் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடர்ந்து அரசு நடத்திட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் வா.பிரமிளா, கலையரசி, மபா.நந்தன், க.புருசோத்தமன் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.