tamilnadu

img

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெறும் நாளன்று ஊழியர்களைத் தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் கே.வி.வேதகிரி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் என்.சாரங்கன், துணைத் தலைவர் பி.குணசேகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் மு.தாமோதரன், அனைத்துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் சீனிவாசன், தபால் ஊழியர் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் வி.ஞானசம்பந்தன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எம்.குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.