செங்கல்பட்டு, ஜூன் 7 - சத்துணவு மையங்களில் காலாவதியாகி கெட்டுப்போன உணவுப் பொருள்களை அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றி லிருந்து மாணவர்களை பாதுகாக்க மார்ச் 17ஆம் தேதி முதல் பள்ளிகள், சத்துணவு மையங்கள் மூடப்பட்டன. அதன்பிறகு சத்து ணவு மையங்கள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட் கள் மக்கி கெட்டியாகி, புழுபிடித்து, வண்டுகள் அரித்து கெட்டுப்போயிருக்கின்றன. இந்த நிலையில், சத்துணவு மையங்க ளில் நல்ல நிலையில் உள்ள எண்ணெய், கொண்டைக் கடலை, பச்சைப் பயிறு ஆகிய வற்றை மட்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் ஊழியர்கள் கொண்டு சென்று சேர்க்க அரசு உத்தர விட்டுள்ளது.
ஆனால் கெட்டுப்போன அரிசி, பருப்பு குறித்து எதுவும் கூறவில்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள சத்து ணவு மையங்களில், அலுவலர்கள் நேரடியாக கெட்டுப் போன அரிசி, பருப்பு, எண்ணெய், கொண்டைக்கடலை, பச்சைப் பயறு போன்ற அனைத்தையும் ஆய்வு செய்து அப்புறப்படுத்த வேண்டும். அந்தப் பொருட்களை ஊழியர்களின் பதிவேட்டு கணக்கிலிருந்து நீக்க வேண்டும். தமிழ கத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்குபோது, அனைத்து மையங்களுக்கும் புதிய உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். அதற்கேற்ப நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்ற னர்.