செய்யூர் எம்எல்ஏ-வுக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெ.அன்பழகன், பழனி, கே.பி.அன்பழகன் ஆகியோரை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 4வது சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொலை...
திருப்பத்தூர் மாவட்டம் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்த சேஷாசலம் (65), தனது மனைவி மல்லிகாவை (60) பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் நகரக் காவல் துறையினர் சேஷாசலத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடும் நடவடிக்கை தேவை...
சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணத்திற்கு காரணமான காவல்துறை மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஆய்வு...
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டி சோதனைச்சாவடியில் வாகன சோதனை செய்யும் பணியை சார் ஆட்சியர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குற்றச்சாட்டு...
புதுவையில் நடைமுறையில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுப்பதாக என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம்
சாட்டினார்.
போலி மருத்துவமனைக்கு சீல்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கழிவறை வழியாகச் சென்று சுவர் ஏறிக்குதித்துத் தப்பியவர் உள்பட 28 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் நடத்தி வந்த சிகிச்சை மையங்களுக்குச் சீல் வைக்கப்பட்டன.