படகு கவிழ்ந்து மீனவர் பலி
செங்கல்பட்டு, ஆக.29காஞ்சிபுரம் மாவட்டம், உய்யாலி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் (39). இவர் தனது உறவினரான ராமஜெயத்துடன், உய்யாலிகுப்பம் பகுதியில் உள்ள கடலில் நாட்டுப் படகில் புதனன்று (ஆக.29) மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடலில் மீன் பிடித்துக் கொண்டி ருந்த போது, படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில், இருவருமே கடலில் முழ்கினர். ராமஜெயம் மட்டும் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்துள்ளார். கடலில் மாயமான குப்பனை மீனவர்கள் உதவியுடன் காவல்துறையினர் தேடினர். இந்நிலையில், குப்பனின் உடல் கல்பாக்கம் பகுதியில் கரை ஒதுங்கியது. இது பற்றி தகவல் அறிந்த கல்பாக்கம் காவலர்கள் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் தனியாக இருந்த குழந்தை மீட்பு
செங்கல்பட்டு, ஆக.29- செங்கல்பட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வியாழனன்று (ஆக.28) அதிகாலை பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று, கேட்பாரற்று இருந்தது. உடனே அங்கிருந்தவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறினர். இவர் காவல்துறையிடம் தகவல் தெரிவித்து, குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். குழந்தையின் கையில் ஒரு அட்டை கட்டப்பட்டிருந்தது. அதில் பார்த்தபோது, ஆகஸ்ட் 11 ஆம் தேதி குழந்தை பிறந்தது என தெரியவந்தது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படை யில் குழந்தையின் பெற்றோர் யார் ?, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலேயே குழந்தை பிறந்ததா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி
சென்னை, ஆக.29-சென்னை, வேப்பேரி நெடுஞ்சாலையில் ஆரிய லேன் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. அதற்கு பின்புறம் உணவு விடுதி ஒன்று உள்ளது. இங்கு புதனன்று (ஆக.28) இரவு கேஸ் அடுப்பு பற்ற வைக்கும் போது, எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரவீன் குமார் (25) என்பவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த வேப்பேரி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.