செங்கல்பட்டு,டிச.9- மதுராந்தகம் அருகே அத்திமானம் கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர்களின் பெயரில் போலியாகக் கடன் பெற்று 25 லாரி வாங்கி மோச டியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்த னர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் திங்களன்று (டிச.9) குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் மதுராந்தகம் அருகே அத்திமானம் கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் அத்திமானம் கிராமத்தை சேர்ந்தவர்கள் எம்.கண்ணன், அமரன். இவர்கள் இருவரும் இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பெயரில் அரசு வழங்கும் சலுகையை பயன்படுத்தி சென்னையை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவர் சென்னை துறை முகம், சென்னை பெட்ரோலி யம் கார்பரேசன் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் கடன் பெற்று 25 டேங்கர் லாரிகளை வாங்கி தொழில் நடத்தி வந்துள்ளார். இதற்காக கண்ணன், அமரன் ஆகியோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ரூபாய் சங்கர நாராயணன் வழங்கி வந்துள்ளார். நியாயம் கேட்கச் சென்றால், சங்கரநாராய ணன் ‘எங்களை அடித்து கொலை செய்வோம்’ என மிரட்டுகிறார். எனவே எங்கள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட சங்கரநாராயணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களு டைய சான்றிதழ்களையும் அவர்களிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்ருந்தது. இதனையடுத்து மனு வினை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறைக்கு உத்தர விட்டுள்ளார்.