செங்கல்பட்டு, மே 28- கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் நான்கு கிராமங்களில் ஆர்சானிக் ஆல்பம் 3சி மருந்து வழங்கப்பட்டது. கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவிவரும் வேளையில் ஹோமியோபதி மருந்தான ஆர்சானிக் ஆல்பம் 30சி என்ற நோய் எதிர்ப்புச் சக்தி மருந்தை பயன்படுத்த ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதனையொட்டி செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட பொறையூர், இந்தலூர், தண்டலம், மதுராந்தகம் வட்டம் புலிக்கொரடு ஆகிய கிராமங்களில் ஹோமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த முகாமை நடத்தின.
இம்முகாமில் நான்கு கிராமங்களைச் சார்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்க ளுக்கு ஆர்சானிக் ஆல்பம் 30சி என்ற மருந்து வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட திரைக்கலைஞர்கள் இள வரசு, ‘பூ’ ராமு ஆகியோர் கிராம மக்க ளுக்கு மருந்துகளை வழங்கினர். இந்நிகழ்வில் மருத்துவர்கள் அ.ஆனந்த குமார், வி.எ.ஜவகர், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன், செயலா ளர் க.புருசோத்தமன், மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி, மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மருத்துவர் வா.பிரமிளா, மாவட்டப் பொருளாளர் கலை யரசி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முகமது உசேன், செயலாளர் தாமோ தரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.