மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மூத்த தலைவர் ராஜலட்சுமிநரசிம்மன் கட்சி நிதியாக ரூபாய் 50 ஆயிரத்தை கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோரிடம் வழங்கினார். கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஏ. பெருமாள், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் மாநில குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் அப்போது உடனிருந்தனர்.