tamilnadu

செங்கல்பட்டு முக்கிய செய்திகள்

சட்டக்கல்லூரி மாணவியர் விடுதியில் தரமற்ற  உணவு:  25 மாணவிகள் மயக்கம்
செங்கல்பட்டு, ஆக.7- புதுப்பாக்கத்தில் செயல்பட்டுவரும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவியர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கியதால் மயக்கமடைந்த 25 மாணவிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் கிளை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியில் 232 மாணவிகள் தங்கி படித்து வருகின்ற னர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் விடுதி அறையின் மேற்கூரை பெயர்ந்து விழுவதாகவும் மற்றும் விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்ற முறையில் இருப்பதாக வும், கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். எனினும், கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில், விடுதியிலிருந்து கல்லூரிக்கு வந்த மாணவிகள் சிலர் திடீரென வாந்தி எடுத்தவாறு மயக்க மடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், சில மாணவிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுதாக தெரிகிறது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட 25 மாணவிகளை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, 5 மாணவிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற மாணவிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விவசாயிகள்  கடன்களை தள்ளுபடி செய்திடுக குடியரசுத் தலைவருக்கு மனு 
செங்கல்பட்டு, ஆக.7-  விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே.நேரு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார். இதன் விவரம் வருமாறு:- நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான நெருக்கடி யில் சிக்கித் தவிக்கின்றனர். விவசாய உற்பத்தி செலவு கள் அதிகரித்துவரும் நிலையில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குக் குறைந்த பட்ச கட்டுபடியான விலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் கடன் சுமை யில் விவசாயிகள் தற்கொலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர். பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் தங்களைச் சந்தித்தபோது, விவசாயிகள் விடுதலை சட்டம் - 2018  மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு உத்தரவாதம் செய்யும் சட்டம் 2018 ஆகியவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தீர்கள். எனவே தங்களின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.