tamilnadu

img

ரூ.30 லட்சம் மதிப்பில் செம்மர கட்டைகள் பறிமுதல்

மறைமலைநகர், ஜன.4- மறைமலை நகர் காமரா ஜர் சாலையில், சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிக் குப்பத்தை சேர்ந்தவர் பழனி  (47). இவர் சொந்தமாக குடோன் ஒன்று வைத்துள் ளார். சென்னை மணலியை சேர்ந்த ஷேக் அலி என்பவர் பாக்கு மட்டை தயாரிப்பதாக கூறி, அந்த குடோனை மாதம் ரூ. 1.8 லட்சம் வாடகைக்கு எடுத்துள்ளார்.  இந்நிலையில் இந்த குடோனில் செம்மரக்கட்டை கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைந்துள்ளது. இத னடிப்படையில்  காவல்துறை யினர் குடோனில் ஆய்வு செய்தனர். அப்போது, சுமார் 11 டன் எடையுள்ள செம்மரக் கடைகள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து செம்மர கட்டைகளை பறி முதல் செய்து, குடோனுக்கு சீல் வைத்தனர்.  தலை மறைவாகியுள்ள குடோன் உரிமையாளர் பழனி , வாடகைக்கு எடுத்த ஷேக் அலி ஆகியோரை காவல்  துறையினர் தேடிவருகின்ற னர்.

;