tamilnadu

img

தியேட்டர்களைக் கொளுத்துவோம்... பாகுபலி இயக்குநர் ராஜமவுலிக்கு பாஜக பகிரங்க மிரட்டல்

ஹைதராபாத்:
பாகுபலி திரைப்பட இயக்குநர்  எஸ்.எஸ். ராஜமவுலி, புதிதாக இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், இந்துக்களின் உணர்வைப் புண்படுத்துவதாக உள்ளது என்றும், இந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களைக் கொளுத்துவோம் என்றும் பாஜக மிரட் டல் விடுத்துள்ளது.

20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்,ஹைதராபாத் நிஜாமிற்கு எதிரான தெலுங்கானா விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் கொமாரம் பீம், அல்லூரி சீதாராம ராஜூ ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு, இயக்குநர் ராஜமவுலி  ஆர்.ஆர்.ஆர். (ரவுத்திரம்- ரணம்- ருதிரம்) என்ற புதிய திரைப் படத்தை இயக்கி வருகிறார்.ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜா, அஜய்தேவ்கான், ஆலியா பட்உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப் படம் தமிழ், தெலுங்கு உட்பட 10 மொழிகளில் தயாராகி வருகிறது. இதுவரை 40 சதவிகித படிப்பிடிப்பு நடந்து முடிந் துள்ளது. 

2021 ஜனவரி 8 அன்று இந்தப் படம்திரைக் வரும் என்று அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், படம் தொடர்பான முதற்கட்ட விளம்பரம் (teaser) அண்மையில்வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற் பைப் பெற்றது. ‘பாகுபலி’யைப் போலமற்றுமொரு பிரம்மாண்டம் என்று டீசரைரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில்தான், டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், இந்துக்களின் உணர்வைப் புண்படுத்துவதாக கூறி வழக்கம்போல பாஜக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.கொமாரம் பீம் ஒரு இந்து; ஆனால், இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். தலையில் தொப்பிஅணிந்து, கண்களில் சுர்மா, கழுத்தில் தாயத்து போட்டு இஸ்லாமியர் தோற்றத்தில் வருகிறார்; இது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி என கூப்பாடு போட்டுள்ளது.
குறிப்பாக, தெலுங்கானா மாநில பாஜக தலைவரும், கரீம்நகர் எம்.பி.யுமான சஞ்சய் குமார், “ஆர்.ஆர்.ஆர்.படம் வெளியாகும் அனைத்து தியேட்டர் களையும் தீ வைத்துக் கொளுத்துவோம்; இயக்குநர் ராஜமவுலியை தடிகொண்டு தாக்குவோம்” என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

கொமாரம் பீம், கோண்ட் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் என்ற நிலையில், பழங்குடி மக்களின் உணர்வை புண் படுத்தினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று மற்றொரு பாஜக எம்.பி.யுமான சோயம் பாபு ராவ் மிரட்டியுள்ளார்.இதனிடையே, ராஜமவுலியை மிரட்டும் பாஜக-வினருக்கு தெலுங்கு திரையுலகத்தினர் கடும் கண்டனங்களை தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.இந்து - முஸ்லிம், கிறிஸ்தவர்களின் பிணைப்பை வெளிக்காட்டும் வகையிலான காட்சிகளை அமைப்பதை, இயக்குநர் ராஜமவுலி, தனது முதல்திரைப்படம் துவங்கி பெரும்பாலான படங்களில் வழக்கமாக வைத்திருக்கிறார். இவற்றில், மகதீரா (தமிழில் ‘மாவீரன்’) படத்தில் வரும் ஷேர் கான்,சாலமன் கதாபாத்திரங்கள், பாகுபலிபடத்தில் வரும் அஸ்லம் கான் கதாபாத்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.