வேலூர், ஜூன் 17- வேலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாண வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்ப டுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மாண வர்கள் பயன்பெறும் வகையில் 45 விடுதிகள் செயல்பட்டு வரு கின்றன. இந்த விடுதிகளில் 4 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ, பட்டப் படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர லாம். அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் விகிதாசார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். விடுதி மாணவ, மாணவிகளுக்கு உணவும், தங்கும் வசதி யும் அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேர விரும்புவோரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகா மல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வசிக்கும் இருப்பி டத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்தத் தொலைவு விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியான மாணவ, மாணவிகள் விடுதிக் காப்பாளரிடம் இருந்தோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலகத்தில் இருந்தோ விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளி விடுதிதிகளின் காப்பாளரிடமோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவ லகத்திலோ வரும் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமோ அல்லது மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலொ ஜூலை 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி, பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் களை அளிக்கத் தேவை யில்லை. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம்.