ராணிப்பேட்டை நகரை புறக்கணிக்கும் தொலைதூர பேருந்துகள்
வேலூர், அக். 5- சென்னை, மற்றும் காஞ்சிபுரம், தொலைதூரம் செல்லும் அரசு பேருந்துகள் ராணிப்பேட்டை நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு தனி அலுவலர், எஸ்.திவ்யதர்ஷினியை ராணிப்பேட்டை பொதுப்பணித்துறை பயணியர் விடுதியில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, வாலாஜா தாலுகா செயலாளர் என்.ரமேஷ், தலைவர் நிலவு குப்புசாமி ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிறுப்பதாவது:- ராணிப்பேட்டை தனி மாவட்டமாக அறிவித்துள்ள நேரத்தில், ராணிப்பேட்டை தொகுதியில் இருந்த 13 ஊராட்சிகளை காட்பாடி தொகுதியில் இணைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை, மீண்டும் ராணிப்பேட்டை மாவட்டத் துடன் இணைப்பதன் மூலம் 13 ஊராட்சியில் வசிக்கும் பொது மக்கள் வீண் அலைச்சலுக்கு விடுதலை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணிப்பேட்டையை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில், சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருப்பத்தூர் செல்லும் தொலைதூர அரசு பேருந்துகள், ராணிப்பேட்டை நகருக்குள், வந்து செல்லாமல், புற வழிச்சாலை வழியாக செல்லும் அவலநிலை நீண்ட காலமாக உள்ளது, எனவே பேருந்துகள் ராணிப்பேட்டை நகருக்குள் வந்து செல்ல வேண்டும், மேலும், ராணிப்பேட்டையிலிருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் புறப்பட்டு செல்லும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியிருந்தனர்.
வரதட்சணைக்கொடுமை: கணவர் கைது
தேனி, அக். 5- ஆண்டிபட்டி அருகே மனைவியிடம் வரதட்ச ணைக் கேட்டு கொடுமைப்ப டுத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மேக்கி ழார்ப்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி(23).இவருக்கும் அனுப்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவ ருக்கும் கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு திருமணம் முடிந்து ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக வும் இதனால் ஈஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈஸ்வரி தனது தாய் வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்று விட்டார்.இதனிடையே கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி கணவர் வீட்டிற்கு வந்த ஈஸ்வரியை கணவர் அவரது மாமியார் மற்றும் அவர்களது உறவினர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் மேலும் கணவருடன் சேர்ந்து வாழ ரூ.5 லட்சம் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஈஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸலர் ஈஸ்வ ரன் அவரது தாயார் லிங்கம் மாள்,உறவினர்கள் இச்கியம் மாள்,வேலம்மாள் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர்.