வேலூர், மே 14-ஓவியம், வண்ணம் தீட்டுதல், யோகா, சதுரங்கம், இசை, தபேலா, கீ -போர்டு வாசிப்பது, அழகிய கையெழுத்துப் போட்டி, தமிழில் பிழையின்றி எழுதுதல், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், பயிற்சிகளும் அளிக் கப்படுகின்றனர். மே 30ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. மாவட்ட மைய நூலகத்தில் சிறுவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் தொடங்கியது. மாவட்ட நூலக அலுவலர் க.ஆனந்தன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் எ.ரத்தினவேலு, காட்பாடி செஞ்சிலுவை சங்கச் செயலர் செ.நா.ஜனார்த்தனன், ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலவலர் நா.ராசகோபாலன், மாவட்ட நூலக கண்காணிப்பாளர் த.ம.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேலூர் சாராட்சியரும், காட்பாடி செஞ் சிலுவை சங்கத் தலைவருமான கே.மெகராஜ் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து பேசுகையில்,“ மாணவர்கள் விடுமுறை நாட்களில் தொலைக்காட்சியை பார்ப்பது, விளையாடுவதுடன் மட்டுமல்லா மல் புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். நூல்களைப் படிக்கும் பழக்கத்தை எப்போதும் தொடர வேண்டும்” என்றார்.