tamilnadu

img

ஆசிரியர் இல்ல பொன் விழா

வேலூர்,ஜன.20- ஆசிரியர்கள் தங்கள்  வாழ்க்கையில் ஒளிவு மறைவு இன்றி வெளிப்ப டைத் தன்மையுடன் இருக்க வேண்டுமென தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார் . வேலூரில் உள்ள திரு வண்ணாமலை மாவட்டங்க ளின் ஆசிரியர் நலன் மற்றும்  கல்வி மேம்பாட்டுக் கழக (ஆசிரியர் இல்லம்)தின் ஐம்பதாவது ஆண்டு பொன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு சான்று வழங்கி கவுரவித்தார்.  வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் விஐடி பல்கலைக் கழக வேந்தர் கோ.விஸ்வநாதன் தென்னிந்திய திருச்சபை பேராயர் சர்மா நித்யா னந்தம் ஆசிரியர் இல்ல நிர்வாகிகள் தலைவர் குணசீல பூபதி பொதுச் செய லாளர் பொருளாளர் பழனி உள்ளிட்ட ஓய்வுபெற்ற ஆசி ரியர்கள் மற்றும் ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

;