தமிழக அரசின் அநியாய மின் கட்டண வசூலைக் கண்டித்து வேலூர் மாவட்டம் பாகாயம், அரியூர், சாயிநாதபுரம் பகுதிகளில் உள்ள இளநிலை மின் பொறியாளர் அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, தாலுகா செயலாளர் சிஎஸ்.மகாலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.