வேலூர், ஏப்.29- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கும் உத்தரவி னால் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வந்த வடமாநிலத்தவர்கள் வேலூர் விடுதியில் தங்கி பரிதவித்தனர். சொந்த மாநிலத்திற்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்ததின் பேரில் வேலூர் மாநகரில் உள்ள டாக்சி ஒட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஒட்டு னர்கள் மூலம் கொல்கத்தா, ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சென்று அவரவர்கள் சொந்த ஊரில் இறக்கிவிட்டனர்.
இதில், ஒடிசா சென்ற ஓட்டுனர்கள் தமிழ் நாடு திரும்புவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்து விட்டது. இம்மாதம் 19ஆம் தேதி முதல் 6 நாட்க ளாக சாலையில் காத்துக் கிடந்தனர். இதனை அடுத்து, வேலூர் மாவட்டத் சிஐடியு தலைவர் எம்.பி.ராமச்சந்திரன். மாவட்டச் செயலா ளர் எஸ்.பரசுராமன், சாலை போக்குவரத்து மாவட்டத் தலைவர் ஜி.கேசவன். மாவட்டச் செயலாளர் என்.பிர பாகரன் ஆகியோரை தொடர்பு கொண்ட டாக்ஸி மற்றும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் நிலைமை களை எடுத்துக் கூறியதோடு தங்களை அங்கிருந்து வீட்டு வரவேண்டும் என்று தலைவர்களிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சித் தலை வர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகி யோரை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட ஓட்டுனர்க ளின் பெயர் பட்டியலைக் கொடுத்து நிலைமை களை விளக்கினர். மேலும் சிஐடியு, மாநிலத் தலைவர் சவுந்தர ராசன், மாநிலச் செயலாளர் ஜி.சுகுமாறன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆறுமுக நயினார், செயலாளர் எஸ். மூர்த்தி, சிஐடியு மாநில துணைத் செயலாளர் எம்.சந்திரன் ஆகியோ ருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக சிஐடியு மாநில தலை வர்கள் தலையீட்டில் பெயரில் சாலை போக்கு வரத்து அகில இந்திய பொது செயலாளர் கே.கே. திவாகரன தலையிட்டு ஒடிசா மாநில சிஐடியு தலைவர் ஜனார்தனபதியை தொடர்பு கொண்டார். அதன்பிறகு, ஒடிசா முதலமைச்சர் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரையும் தொடர்பு கொண்ட திவாகரன் முயற்சியால் ஒடிசா மாநி லத்தில் 6 நாட்களாக அடைபட்டுக் கிடந்த தமிழ கத்தைச் சேர்ந்த டாக்ஸி ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் வேலூருக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
சொந்த ஊர் திரும்புவதற்கு அனைத்து உதவி களையும் செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை, மாநில அதிகாரிகள் ,சிஐடியு அகில இந்திய, மாநில மாவட்ட நிர்வாகிகள் அனை வருக்கும் வேலூர் மாவட்ட டாக்ஸி மற்றும் ஆம்பு லன்ஸ் ஓட்டுனர்கள் சங்கத்தினர் நன்றி தெரி வித்துள்ளனர்.